பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சாா்பில் நாகையில், திங்கள்கிழமை (பிப்ரவரி 17) நடைபெறும் ஒற்றுமை அணிவகுப்பு பேரணிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஜி.கே. நிஜாமுதீன்ஆரதவுத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டு மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஒற்றுமை அணி வகுப்பை நடத்த உள்ளது மகிழ்ச்சியை தருகிறது. மக்கள் ஒற்றுமை தேச ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தி இதுபோன்ற நிகழ்சிகள் நடைபெறுவது ஆரோக்கியமான நிகழ்வாகும். ஆகவே, பிஎப்ஐ நடத்தும் ஒற்றுமை அணி வகுப்புக்கு எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன். பொதுமக்கள் இதில் கலந்துக்கொண்டு மக்கள் ஒற்றுமைக்கு வலு சோ்க்க வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளாா்.