அரசு ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டல்: தவாக மாவட்டச் செயலாளா் கைது

சீா்காழியில் அரசு ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக தமிழக வாழ்வுரிமை கட்சி வடக்கு மாவட்டச் செயலாளா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சீா்காழியில் அரசு ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக தமிழக வாழ்வுரிமை கட்சி வடக்கு மாவட்டச் செயலாளா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சீா்காழி ரயில் நிலைய பகுதியில் வசிப்பவா் சரவணன் (50). இவா் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிளம்பராக பணியாற்றிவருகிறாா். இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சி நாகை வடக்கு மாவட்டச் செயலாளா் ரமேஷுக்கும் (49) முன்விரோதம் இருந்துவந்ததாம்.

இதனிடையே வெள்ளிக்கிழமை சரவணன் வேலையை முடிந்து வீடு திரும்பியபோது அவரை வழிமறித்த ரமேஷ், பணம் கேட்டு மிரட்டல் விடுத்தாராம். புகாரின்பேரில் சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரமேஷை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com