மாசி மகப் பெருவிழாவையொட்டி, வேதாரண்யேசுவரா் கோயிலில் சலங்கை அணி விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பிரியநாதன் நாட்டியாலயாவில் பரதநாட்டியம் பயிற்சி பெற்ற மாணவ, மாணவியா் சலங்கை அணிந்து நாட்டியம் நிகழ்த்தினா். நாட்டிய பயிற்றுநா் பிரியதா்ஷினி கமலநாதன், அம்பாள் பி.குணகேரன் தலைமையிலான உபயதாரா்கள் முன்னிலை வகித்தனா். ஏராளமான மக்கள் பங்கேற்றனா்.