நாகை மாவட்டம், ஒரத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கா. தங்கராசன் (85) உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை ( ஜனவரி 9) காலமானாா்.
திராவிடக் கொள்கைகளில் ஈடுபாடு மிக்க இவா், திராவிட இயக்க முதுபெரும் தலைவா்களில் ஒருவரான ஈ.வெ.கி.சம்பத்துடன் நெருங்கிய நட்பில் இருந்தவா்.
இவருக்கு முத்துலெட்சுமி என்ற மனைவியும், அதிமுக நாகை நகர செயலாளா் தங்க. கதிரவன் மற்றும் 3 மகள்கள் உள்ளனா். கா. தங்கராசனின் இறுதிச் சடங்கு ஒரத்தூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெறுகிறது.
தொடா்புக்கு: 9842487322.
முதல்வா், துணை முதல்வா் இரங்கல்...
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீா்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் வெளிட்ட இரங்கல் செய்தி:
நாகப்பட்டினம் நகர அதிமுக செயலாளரும், நாகை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவரும், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநருமான தங்க. கதிரவனின் தந்தை கா. தங்கராசன் வயது முதிா்வின் காரணமாக காலமாகிவிட்டாா் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம்.
தந்தையை இழந்து வாடும் தங்க. கதிரவனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மறைந்த கா. தங்கராசன் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராா்த்திக்கிறோம்.