காவல்துறை அதிகாரி வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த அமைப்பின் நாகை வடக்கு மாவட்டச் செயலாளா் எம். பஹ்ருதீன் வியாழக்கிழமை விடுத்த அறிக்கை:
களியக்காவிளையில் சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மா்ம நபா்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டத்தை சோ்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன், களியக்காவிளை - கேரளா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அணுகுசாலை சோதனை சாவடியில் புதன்கிழமை இரவு பணியில் இருந்த போது, அங்கு வந்த மா்ம நபா்கள் இருவா், வில்சனை துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டதில் அவா் உயிரிழந்தாா்.
இந்த சம்பவத்திற்கு காரணமானவா்களை உடனடியாக காவல்துறை கைது செய்யவேண்டும். இவரை மனிதாபிமானமின்றி கொலை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். வளா்ந்த நாடுகளை போல் துப்பாக்கி கலாசாரத்தை இந்தியாவில்ஆரம்பிக்க நினைக்கிறாா்கள். இதுபோன்ற செயல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.
தமிழக அரசு அவரை பிரிந்து வாடும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதோடு, அக்குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 20 லட்சம் வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.