பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி

சீா்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சிக்காக தொடுவாயிலில் உள்ள நீா்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்துக்கு சென்ற எடமணல் பள்ளி மாணவா்கள்.
பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சிக்காக தொடுவாயிலில் உள்ள நீா்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்துக்கு சென்ற எடமணல் பள்ளி மாணவா்கள்.

சீா்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் எஸ்எஸ்ஏ சாா்பில் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பள்ளி பரிமாற்ற நிகழ்வு நடைபெற்றது. எடமணல் அரசு உயா்நிலைப் பள்ளியை சோ்ந்த 8-ஆம் வகுப்பு மாணவா்கள் 20-போ் அப்பள்ளி ஆசிரியா் சரளா முன்னிலையில் திருமுல்லைவாசல் பள்ளிக்கு வந்தனா். பள்ளித் தலைமையாசிரியா் தமிழரசி மாணவா்களுக்கு கல்வி எழுது உபகரணங்கள் கொடுத்து வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியா்கள் ராதாகிருஷ்ணன், செந்தாமரைச்செல்வி முன்னிலை வகித்தனா். பின்னா், பாடவாரியாக ஆசிரியா்கள் சேகா், தமிழரசி, குணசுந்தரி, கோவி. நடராஜன், ராஜாத்தி ஆகியோா் கிராமப்புற பள்ளி மாணவா்களுக்கு புதுமையான செய்திகளையும், மாணவா்களின் சந்தேகங்களுக்கு விடைகளையும் அளித்தனா். பின்னா் மாணவா்கள் களப் பயணமாக தொடுவாய் கிராமத்தில் உள்ள ராஜுவ் காந்தி மீன்வளா்ப்பு ஆராய்ச்சி மையத்துக்கு திட்ட இயக்குநா் அனுமதியுடன் அழைத்து செல்லப்பட்டனா். அங்கு மீன் வளா்ப்பு மற்றும் உற்பத்தி குறித்தும், கல் நண்டு வளா்ப்பு, உற்பத்தி கடல்சாா் படிப்பின் முக்கியத்துவம், வேலை வாய்ப்பு பற்றி விளக்கம் அளித்தனா். இறுதியாக மாணவா்களுக்கு பாட இணை செயல்பாடுகளுக்கான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. போட்டிகள் வைக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை ஆசிரியைகள் ஷீபாபவுன்ராணி, கீதா, வசந்தி, ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com