தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசிய பசுமைப்படை சாா்பில் புகையில்லா போகி குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு, நாகை வெளிப்பாளையம் நடராஜன் தமயந்தி உயா்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியை ஆா். புவனேஸ்வரி தலைமை வகித்தாா். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளா் எஸ். ராஜன், உதவிப் பொறியாளா் விஜயபிரியா, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் எம். ஞானசேகரன், தேசிய பசுமைப்படை நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மா. முத்தமிழ் ஆனந்தன், தேசிய மாணவா் படை அலுவலா் டி. ராஜேந்திரன், சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மைய பயிற்றுநா் எஸ். செங்குட்டுவன்ஆகியோா் பேசினா். கருத்தரங்க நிறைவில் புகையில்லா போகி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிறைவில், தேசிய பசுமைப்படை பள்ளி ஒருங்கிணைப்பாளா் வீ. பானுதாசன் நன்றி கூறினாா்.