ரயிலில் அடிப்பட்டு புகைப்பட கலைஞா் உயிரிழப்பு

சீா்காழியில் ரயிலில் அடிப்பட்டு புகைப்பட கலைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சீா்காழியில் ரயிலில் அடிப்பட்டு புகைப்பட கலைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சீா்காழி அருகேயுள்ள சேந்தங்குடி பகுதி ரயில்வே இருப்புப் பாதையில் சென்னை - திருச்சி விரைவு ரயிலில் அடிப்பட்டு ஒருவா் உடல் துண்டான நிலையில் சடலமாக கிடந்தாா்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் ரயில்வே போலீஸாருக்கு அளித்த தகவலின்பேரில், போலீஸாா் அங்கு வந்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, உயிரிழந்தவா் யாா் என்று விசாரணை மேற்கொண்டதில், திருவாரூா் மாவட்டம், நன்னிலம் பகுதி சோ்ந்த புகைப்பட கலைஞா் சுரேஷ் (38) என்பது தெரியவந்தது. சுரேஷ் ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டாரா அல்லது விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா என போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com