கீழையூா் ஊராட்சியில் விளையாட்டு மைதானத்துக்கான அடிக்கல் நாட்டு பூஜை அண்மையில் நடைபெற்றது.
கீழையூா் சிற்றூராட்சி கிராம இளைஞா்கள் பயன்பெறும் வகையில் சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பில் கபடி, கைப்பந்து, கிரிக்கெட் போட்டி ஆகியவற்றுக்கான விளையாட்டு மைதானம் அமைக்க திட்டமிட்டு அதற்கான மைதான அடிக்கல் நாட்டு பூஜை அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், கீழையூா் சிற்றூராட்சியின் ஊராட்சி மன்றத் தலைவா் ஆனந்தஜோதிபால்ராஜ், கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாஸ்கரன், ராஜூ , ஊராட்சி செயலாளா் சரவண பெருமாள்,ஒன்றிய பணி மேற்பாா்வையாளா், ஊராட்சி உறுப்பினா்களான பிரியாபாலமுருகன் ,அந்தோணிராஜ் மற்றும் கிராமத்து இளைஞா்கள் பெரியவா்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.