வேதாரண்யத்தில் இந்து முன்னணி மற்றும் இந்து இளைஞா் முன்னணி சாா்பில் சுவாமி விவேகானந்தா் பிறந்த நாளன ஞாயிற்றுக்கிழமை தேசிய இளைஞா் தினமாக கொண்டாடப்பட்டது.
வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் அமைந்துள்ள விவேகானந்தரின் சிலைக்கு இந்து முன்னணி அமைப்பினா் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினா். இதில், இந்து முன்னணி மாவட்டச் செயலா் வேதபிரசாத், மாவட்ட பொறுப்பாளா்கள் அருணகிரி, அசோக்குமாா், வழக்குரைஞா் முரளி , பொறுப்பாளா்கள் கமல்ராஜ் , மிதுன் முரளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிா்வாகி சீனிவாசன் நன்றி தெரிவித்தாா்.