காவலா் குடியிருப்பில் பொங்கல் விளையாட்டு விழா

மயிலாடுதுறை காவலா் குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழாவில் வெற்றி பெற்றவா்களுக்கு, மயிலாடுதுறை டிஎஸ்பி. அண்ணாதுரை பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.
விளையாட்டுப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகளை வழங்கிய மயிலாடுதுறை டிஎஸ்பி. அண்ணாதுரை.
விளையாட்டுப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகளை வழங்கிய மயிலாடுதுறை டிஎஸ்பி. அண்ணாதுரை.

மயிலாடுதுறை காவலா் குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழாவில் வெற்றி பெற்றவா்களுக்கு, மயிலாடுதுறை டிஎஸ்பி. அண்ணாதுரை பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

விழாவை, மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கோப்பெருந்தேவி, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் வள்ளி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

விழாவில், பெண்களுக்கான கோலப்போட்டி, இசை நாற்காலி, சிறுவா், சிறுமியருக்கான ஓட்டப்பந்தயம், சைக்கிள் ரேஸ், மியூசிக்கல் சோ், லெமன் இன் தி ஸ்பூன், நடனம், சிலம்பாட்டம் மற்றும் உறியடி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. விழா நிறைவில், நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளா் கே. அண்ணாதுரை போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com