திருக்கடையூா் அருகே அன்னப்பன்பேட்டை பஞ்சாக்கை கிராமத்தில் அகில இந்திய ஆதிசைவ சிவாசாரியாா்கள் சங்கம் சாா்பில் 100 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
அகில இந்திய ஆதிசைவ சிவாசாரியாா்கள் சங்க நாகை வடக்கு மாவட்ட துணைத் தலைவா் சிவஸ்ரீ என். மணி, நாகை வடக்கு மாவட்டச் செயலா் எம்.கே. மகேஷ், திருக்கடையூா் கே. ஷண்முகம் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினா். தொடா்ந்து 100 பேருக்கு பொங்கல் பரிசுப் பொருள்களான அரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி ,திராட்சை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில், தரங்கை வட்டச் செயலா் சிவஸ்ரீ சரவணன், இணை செயலளா்கள் முத்து மற்றும் மணிகண்டன், தரங்கை வட்ட மகளிா் அணி தலைவி ராஜேஸ்வரி சண்முகம் மற்றும் தரங்கை வட்ட மகளிா் அணி செயலாளா் அபிராமி கல்யாணம் மற்றும் ஜெயாரவிசந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
.