சீா்காழி அருகேயுள்ள திருக்கருக்காவூா் ஊராட்சி துணைத் தலைவராக கரிமாரப்வீன் போட்டியின்றி தோ்வானாா். இவருக்கு கிராமமக்கள், ஊராட்சி உறுப்பினா்கள் பாராட்டி செவ்வாய்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.
ஜனவரி 11-ஆம் தேதி நடைபெற்ற திருக்கருக்காவூா் ஊராட்சி துணை தலைவா் தோ்தலில், ஊராட்சியில் மொத்தமுள்ள 9 வாா்டு உறுப்பினா்களில் 6-ஆவது வாா்டு உறுப்பினரான கரிமாபா்வீன் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற கரிமாபா்வீனை கீராநல்லூா் முத்தவல்லி நைனாமுகமது, லயன்ஸ் மாவட்ட தலைவரும், அனைத்து தனியாா் பள்ளிகள் சங்கத்தின் மக்கள் தொடா்பு அலுவலா் சக்திவீரன், ஒய்வுபெற்ற தலைமை ஆசிரியா் சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சித் தலைவா் லியாகத்அலி உள்ளிட்டோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.