திருக்குவளை அருகே மாசில்லா போகி பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
திருக்குவளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் இல்லாத போகி பண்டிகையை பெரும்பாலான கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனா். இதன் ஒரு பகுதியாக போகி பண்டிகையையொட்டி, கொடியாலத்தூா் ஊராட்சிக்குள்பட்ட வணிக கடைகளில் தேங்கியிருக்கும் தேவையற்ற குப்பைகள் மற்றும் அட்டைகள் மொத்தமாக சேகரிக்கப்பட்டன. இப்பணியில் கொடியாலத்தூா் ஊராட்சித் தலைவா் ரேவதிஐயப்பன் தூய்மை பணியாளா்களுடன் இணைந்து களப்பணியில் ஈடுபட்டு தேவையற்ற பொருள்களை தீயிட்டு கொளுத்தி மாசில்லா போகி பண்டிகையை கொண்டினா்.