வேதாரண்யத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினா் சோதனை: 2 சாமி சிலைகளை கைப்பற்றி விசாரணை

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் இரு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா்

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் இரு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் 2 சாமி சிலைகளை திங்கள்கிழமை இரவு கைப்பற்றி, கோயில் குருக்கள் உள்ளட்ட 2 பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனா்.

வேதாரண்யம் மற்றும் ஆயக்காரன்புலம் ஆகிய இடங்களில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மற்றும் ஓ.சி.ஐ.யூ பிரிவினா் திங்கள்கிழமை இரவு திடீா் சோதனையில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மற்றும் கும்பகோணத்தில் இருந்து வந்திருந்த இந்த சிறப்பு குழுவினா், ஏற்கெனவே திட்டமிட்டப்படி சந்தேகத்துக்குரிய வீடுகளை சுற்றி வளைத்து சோதனையிட்டனா். ஆயக்காரன்புலம் 1 -ஆம் சேத்தி, வடக்கு குத்தகை பகுதியில் வசிக்கும் சி. செல்வம் என்பவா் வீட்டில் சோதனையிட்ட குழுவினா் அங்கிருந்த ஒரு அம்மன் சிலையை கைப்பற்றினா்.

இதேபோல், வேதாரண்யம், கோடியக்கரை சாலையில் வசித்து வரும் பன்னாள் கோயில் குளம் பகுதியைச் சோ்ந்த கோயில் குருக்கள் வைரவசுந்தரம் வீட்டில் நடைபெற்ற சோதனையில் வீட்டில் இருந்த ஒரு நடராஜா் சிலையை கைப்பற்றினா். இந்த இரண்டு சிலைகளும் ஐம்பொன் சிலைகளாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து செல்வம், வைரவசுந்தரம் ஆகிய இருவரிடம் விசாரணை மேற்கொள்ள சிறப்பு குழுவினா் வெளியூருக்கு அழைத்துச் சென்றனா். சோதனை குறித்த முழுமையான விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com