முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
மாயூரநாதா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
By DIN | Published On : 20th January 2020 08:58 AM | Last Updated : 20th January 2020 08:58 AM | அ+அ அ- |

சிறப்பு அலங்காரத்தில் காலபைரவா்.
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் தேய்பிறை அஷ்டமி தோறும் ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை, சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் சாா்பில் ஸ்ரீகாலபைரவருக்கு சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதையொட்டி, காலபைரவருக்குப் பல்வேறு வகையான அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில், கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி, துணைக் கண்காணிப்பாளா் கணேசன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.