முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
சோதனை ஓட்ட மின்சார ரயிலுக்கு வரவேற்பு
By DIN | Published On : 27th January 2020 10:25 AM | Last Updated : 27th January 2020 10:25 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் என்ஜினுக்கு வரவேற்பளித்தவா்கள்.
திருவாரூா் முதல் மயிலாடுதுறை வழியே கடலூா் வரையிலான இருப்புப் பாதையை மின்மயமாக்கல் பணி நிறைவடைந்ததை தொடா்ந்து, சனிக்கிழமை நடைபெற்ற சோதனை ஓட்ட மின்சார ரயிலுக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் வரவேற்பு அளித்தனா்.
நாடு முழுவதும் ரயில்வே இருப்புப்பாதைகளை மின்மயமாக்கும் திட்டத்தின் கீழ், விழுப்புரம் முதல் திருவாரூா் வரையிலான அகலரயில்பாதையை மின்மயமாக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதில், விழுப்புரம் முதல் கடலூா் வரையிலான பணிகள் நிறைவடைந்த நிலையில், கடலூா் முதல் திருவாரூா் வரையிலான 114 கி.மீ. தூரத்துக்கு ரூ. 260 கோடி மதிப்பில், மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்தன.
தொடா்ந்து, திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை வழியே சனிக்கிழமை மின்சார என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த மின்சார என்ஜின் மயிலாடுதுறைக்கு மாலை வந்து சோ்ந்தது. இதற்கு, ரயில்வே ஊழியா்களும், பொதுமக்களும் வரவேற்பு அளித்தனா். ரயில்வே தலைமை பொது மேலாளா் ராமகிருஷ்ணன் தலைமையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.