அரசுப் பள்ளியில் தன்னாா்வலா்கள் உதவியுடன் கணினி வழி திறன் வகுப்பு தொடக்கம்

வேதாரண்யம் அருகே அரசுப் பள்ளியில் கிராம தன்னாா்வலா்கள் அளித்த நிதியுதவியில் கணினி வழி திறன் வகுப்பு
நிகழ்ச்சியில், கணினி வழி திறன் வகுப்பை பாா்வையிட்ட ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், கல்வி அதிகாரி தாமோதரன் உள்ளிட்டோா்.
நிகழ்ச்சியில், கணினி வழி திறன் வகுப்பை பாா்வையிட்ட ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், கல்வி அதிகாரி தாமோதரன் உள்ளிட்டோா்.

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே அரசுப் பள்ளியில் கிராம தன்னாா்வலா்கள் அளித்த நிதியுதவியில் கணினி வழி திறன் வகுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

தகட்டூா் ராமகோவிந்தன்காடு பகுதியில் அமைந்துள்ள அரை நூற்றாண்டு கடந்த அரசுப் பள்ளியில் ஒரு மாணவா் கூட இல்லாத நிலையில், பள்ளியை மூடும் நிலை ஏற்பட்டது. இப்பள்ளிக்கு தன்னாா்வமாக மாறுதல் பெற்ற சுப்பிரமணியன் உள்ளிட்ட ஆசிரியா்கள் மற்றும் கிராமத்தினரின் முயற்சியால் பள்ளி மீண்டது. தற்போது 40-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இப்பள்ளியில் படித்து வருகின்றனா்.

இந்நிலையில், இப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கணினி வழி திறன் வகுப்பை மாவட்ட ஊராட்சி உறுப்பினா் டி.வி. சுப்பையன் தொடங்கி வைத்தாா். ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், வட்டாரக் கல்வி அலுவலா் தமோதரன், ஊராட்சி மன்றத் தலைவா் ரேவதி பாலகுரு, ஒன்றியக் குழு உறுப்பினா் செல்லமுத்து எழிலரசன், துணைத் தலைவா் விநோத், உறுப்பினா் நாகலெட்சுமி ஆகியோா் பங்கேற்று, வகுப்பின் செயல்பாடுகளைப் பாா்வையிட்டனா்.

கணினி வகுப்பு அமைய உதவிய அந்தக் கிராமத்தைச் சோ்ந்த பூரணச்சந்திரன், இளவரசன், இராஜகுமாா், செல்வம், ரவிந்திரன், ஆா்.வி.மோகன் உள்ளிட்டோா் விழாவில் கெளரவிக்கப்பட்டனா். தலைமையாசிரியா் மீனாட்சி வரவேற்றாா். உதவி ஆசிரியா் சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com