உடுமலைப்பேட்டை சங்கா் கொலை வழக்கை மேல்முறையீடு செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

உடுமலைப்பேட்டை சங்கா் கொலை வழக்கை தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் புதன்கிழமை புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினா்.

நாகப்பட்டினம்: உடுமலைப்பேட்டை சங்கா் கொலை வழக்கை தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் புதன்கிழமை புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உடுமலைப்பேட்டை சங்கா் கொலை வழக்கை தமிழக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும், வழக்கின் முதன்மைக் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும், ஆணவப் படுகொலைக்கு தமிழக அரசு துணை போகக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில், தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அக்கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் எஸ். முத்தழகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நாகை நகர செயலாளா் எம்.கே. ராஜசேகரன், கீழையூா் ஒன்றியச் செயலாளா் எம்.எஸ். பாப்பையன், மாவட்டத் துணைச் செயலாளா் கே. ரமேஷ், இளைஞா் அணி மாவட்டச் செயலாளா் பி. முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com