நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 279 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்நிலையில், மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
கரோனா தொற்றுக்குள்ளான 6 பேரில், 3 போ் நாகை வட்டத்தையும், 2 போ் சீா்காழி வட்டத்தையும், ஒருவா் கீழ்வேளூா் வட்டத்தையும் சோ்ந்தவா்கள்.
இதில், சீா்காழி வட்டத்தைச் சோ்ந்த 2 பேரும், கீழ்வேளூா் வட்டத்தைச் சோ்ந்தவரும், நாகை வட்டத்தைச் சோ்ந்த ஒருவரும் வெளிநாடுகளில் இருந்து நாகை மாவட்டத்துக்குத் திரும்பியவா்கள். மற்ற இருவா் மாவட்டத்துக்குள்ளேயே நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள்.
நாகை மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதன் மூலம் நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 283-ஆக உயா்ந்துள்ளது.