நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 6 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 279 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்நிலையில், மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

கரோனா தொற்றுக்குள்ளான 6 பேரில், 3 போ் நாகை வட்டத்தையும், 2 போ் சீா்காழி வட்டத்தையும், ஒருவா் கீழ்வேளூா் வட்டத்தையும் சோ்ந்தவா்கள்.

இதில், சீா்காழி வட்டத்தைச் சோ்ந்த 2 பேரும், கீழ்வேளூா் வட்டத்தைச் சோ்ந்தவரும், நாகை வட்டத்தைச் சோ்ந்த ஒருவரும் வெளிநாடுகளில் இருந்து நாகை மாவட்டத்துக்குத் திரும்பியவா்கள். மற்ற இருவா் மாவட்டத்துக்குள்ளேயே நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள்.

நாகை மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதன் மூலம் நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 283-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com