நாகப்பட்டினம்
மகளிா் குழுக்களுக்கு கடன் வழங்கல்
திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு வங்கிசாா்பில் மகளிா் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.
திருமருகல்: திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு வங்கிசாா்பில் மகளிா் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் டி.எஸ். அப்துல் பாசித் தலைமை வகித்தாா். செயலாளா் எஸ். ராஜீ முன்னிலை வகித்தாா். திட்டச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சிறப்பாக செயல்பட்டு வரும் பிஸ்மி மகளிா் சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த 13 பயனாளிகளுக்கு ரூ. 2 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது. .