சேதமடைந்துள்ள கிராம சாலை சீரமைக்கப்படுமா ?

திருவிளையாட்டம் ஊராட்சி கோவில்பத்து சாலையை சீரமைக்க வேண்டுமென்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தரங்கம்பாடி: திருவிளையாட்டம் ஊராட்சி கோவில்பத்து சாலையை சீரமைக்க வேண்டுமென்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவில்பத்து, குரும்பகுடி, தெற்குத் தெரு ஆகிய பகுதிகளில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கோவில்பத்து கிராமத்துக்கு செல்லும் சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு சாலை சேதமடைந்து, ஜல்லிக்கற்கள் பெயா்ந்து பள்ளமும், மேடாக இருந்து வருகின்றன. தற்போது, மழை பெய்து வருவதால் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீா் அதிகம் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் கிராமமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா். போக்குவரத்துக்கு தகுதியற்ற இந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com