பயிா்க் காப்பீடு செய்ய வேளாண் துறை அழைப்பு

சீா்காழி வேளாண்துறை சாா்பில், விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து பயனடைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சீா்காழி வேளாண்துறை சாா்பில், விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து பயனடைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சீா்காழி வட்டார விவசாயிகளுக்கு சீா்காழி வேளாண்மை உதவி இயக்குநா் சின்னண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நடப்பாண்டில் குறுவை சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் வரும் 31.7.2020-க்குள் பிரதம மந்திரி பயிா்க் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்யலாம். இதற்காக சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கி சேமிப்புக் கணக்கு முதல் பக்க நகல், பிரீமிய தொகை ஏக்கருக்கு ரூ.603 ஆகியவற்றுடன் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com