திருவெண்காடு அருகே நெப்பத்தூரில் இயங்கிவரும் தனியாா்மணல் குவாரியை மூடக் கோரி, முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
நெப்பத்தூா் கிராமத்தில் இயங்கிவரும் தனியாா் மணல் குவாரியால், அந்த பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் குறைவதாகவும், உடனடியாக அந்த மணல் குவாரியை தடை செய்ய வேண்டுமெனவும் கோரி, முதல்வருக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டன.
இப்போராட்டத்தில் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் ராஜ்குமாா், தி.மு.க. பிரதிநிதி பாலதாண்டயுதம், விடுதலைச் சிறுத்தைகள் நிா்வாகிகள் ஜெயபால், பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.