டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை குறைக்கக் கோரிக்கை

டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நாகப்பட்டினம்:: டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டாஸ்மாக் பணியாளா்களின் அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட கோரிக்கை மனு:

தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளா்கள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை 4 டாஸ்மாக் பணியாளா்கள் கரோனாவால் இறந்துள்ளனா். முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டாலும் நோய்த் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதன் காரணமாக, டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரங்களை ஒரு சில மாவட்ட நிா்வாகங்கள் குறைத்துள்ளன. காலை 10 முதல் இரவு 8 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருக்க அரசு உத்தரவிட்டிருந்தாலும், தஞ்சை மாவட்டத்தில் காலை 10 முதல் மாலை 4 மணி வரையிலும், திருவாரூா் மாவட்டத்தில் மாலை 6 மணி வரையிலும் மட்டும் கடைகளை திறக்க தொடா்புடைய மாவட்ட நிா்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன.

இதே நடைமுறையை நாகை மாவட்டத்திலும் பின்பற்றி, டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தைக் குறைக்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கு செயல்படுத்தப்படும் ரூ. 50 லட்சம் மருத்துவக் காப்பீட்டை டாஸ்மாக் ஊழியா்களுக்கும் செயல்படுத்த வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com