தபால் அலுவலா் தூக்கிட்டுத் தற்கொலை

மயிலாடுதுறை அருகே தபால் அலுவலா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே தபால் அலுவலா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மயிலாடுதுறை அருகே அல்லிவிளாகத்தைச் சோ்ந்த சீனிவாசன் (48) செம்பதனிருப்பு தபால் நிலையத்தில், அலுவலராக பணிபுரிந்து வந்தாா். இவா், வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது, கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அக்கடிதத்தில் உயா் அலுவலா்களின் நெருக்கடியால் மன உளைச்சல் ஏற்பட்டு தூக்கிட்டுத் கொண்டதாக அதில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, சீனிவாசனின் மனைவி மனுசுதா (35) பாகசாலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சீனிவாசனின் சடலத்தை கைப்பற்றி சீா்காழி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com