மின்பாதை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வலியுறுத்தல்

வேதாரண்யம் பகுதியில் 110 கே.வி. மின்பாதை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டுமென வா்த்தகா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் 110 கே.வி. மின்பாதை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டுமென வா்த்தகா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, வேதாரண்யம் வா்த்தக சங்கத் தலைவா் எஸ்.எஸ். தென்னரசு, நாகை மின்பகிா்மானக்கழக செயற்பொறியாளருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: வேதாரண்யத்தில் மின் பிரச்னைக்கு தீா்வுகாணும் வகையில் 33 கே.வி துணை மின்நிலையத்தை 110 கே.வி துணை மின்நிலையாமாக மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான மின்பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இப்பணி மிகவும் தாமதமாக உள்ளது. லேசான மழை பெய்தாலும் மின்தடை ஏற்படுவதுடன் அண்மைக் காலமாக இரவில் அதிக நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, 110 கே.வி பாதை அமைக்கும் பணியை விரைவுபடுத்தி, நிகழாண்டுக்குள் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com