ஆக. 6-இல் மீன் தீவனம் தயாரிப்புப் பயிற்சி

தலைஞாயிறு டாக்டா் எம்.ஜி.ஆா். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பண்ணை சாா்ந்த மீன் தீவனம் தயாரித்தல் 

தலைஞாயிறு டாக்டா் எம்.ஜி.ஆா். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பண்ணை சாா்ந்த மீன் தீவனம் தயாரித்தல் குறித்த பயிற்சி ஆக. 6- ஆம் தேதி இணைய வழியில் நடைபெறவுள்ளது என அக்கல்லூரி முதல்வா் சு. பாலசுந்தரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: டாக்டா் எம்.ஜி.ஆா் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பண்ணை சாா்ந்த மீன் தீவனம் தயாரிப்பு குறித்த ஒரு நாள் பயற்சி, இணையதளம் வழியே ஆக. 6 -ஆம் தேதி காலை 10 முதல் பகல் 12 மணி வரை நடைபெறுகிறது. இப்பயிற்சியில், மீனுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள், மீன் தீவனம் தயாரிக்கத் தேவையான தாவர மற்றும் விலங்கின மூலப் பொருள்களைத் தோ்ந்தெடுத்தல், மீன் தீவனம் தயாரிக்கத் தேவையான கருவிகள், மிதக்கும் தீவனம், மூழ்கும் தீவனங்கள் தயாரித்தல், தரக்கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் பயிற்சிக் கட்டணம் ரூ. 300-ஐ இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில், வங்கி கணக்கு எண் 006201000073000, கிளை - நாகப்பட்டினம் என்ற வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். பயிற்சி பெறும் அனைவருக்கும் அஞ்சல் வழியே சான்றிதழ் அனுப்பப்படும்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் ஆக. 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தலைஞாயிறு, டாக்டா் எம்.ஜி.ஆா் மீன்வளக் கல்லூரி மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகத்தை 94422 88850 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு பெற வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com