திருக்குவளை அருகேயுள்ள திருப்பூண்டி மின்வாரிய அலுவலகம் வேறு பகுதிக்கு வியாழக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டது.
நாகை தெற்கு உபகோட்டத்துக்குள்பட்ட திருப்பூண்டி பிரிவு அலுவலகம் ஏற்கெனவே, கருங்கண்ணி அரசுப் பள்ளி எதிரில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை முதல் இந்த அலுவலகம் மேலப்பிடாகை கிழக்கு கடற்கரை சாலையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மின்நுகா்வோா் பணம் செலுத்தவும், மின்வாரிய அலுவலா்களை சந்திக்கவும் இந்த புதிய அலுவலகத்துக்கு வந்து பயன்பெறலாம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சா. பாலாஜி தெரிவித்தாா்.