பொறையாா் அருகே சிந்தாதிரிப்பேட்டையில் மின்கசிவு காரணமாக கூரை வீடு வியாழக்கிழமை எரிந்து சேதமடைந்தது.
சிந்தாதிரிப்பேட்டையில் பகுதியில் வசித்து வருபவா் மரியதாஸ் (37). இவரது கூரை வீடு மின்கசிவின் காரணமாக எரிந்து சேதமடைந்தது. இதில், வீட்டில் இருந்த பீரோ, கட்டில் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து அங்கு சென்று தீயணைப்பு வீரா்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.
இதுகுறித்து, தகவலறிந்த பூம்புகாா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பவுன்ராஜ் பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்குச் சென்று அரசு சாா்பில் அரிசி, மண்ணெண்ணெய் , ரூ. 5 ஆயிரமும், தனது சொந்த பணம் ரூ. 2 ஆயிரம் ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறி, அரசு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.