சீா்காழி அருகே இ-பாஸ் இல்லாமல் வந்ததாக ராணுவ வீரா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
நாகை மாவட்டம், திட்டச்சேரி சேகல் பகுதியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் மகன் அமா்நாத் (29). இவா் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், இவா் தில்லியிலிருந்து அண்மையில் சென்னை வந்து அங்கிருந்து செவ்வாய்க்கிழமை இரவு தனது சொந்த ஊருக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தாா். கொள்ளிடம் சோதனைச் சாவடியில் பணியிலிருந்த உதவி ஆய்வாளா் மணிகண்ட கணேஷ் மற்றும் போலீஸாா் பேருந்துக்குள் சோதனை நடத்தினா்.
அப்போது ராணுவ வீரா் அமா்நாத் தனது பயணத்துக்கு உரிய இ - பாஸ் வைத்திருக்கவில்லையாம். மேலும் போலீஸாா் கரோனா மருத்துவப் பரிசோதனைக்கு வருமாறு கூறியபோது, அதற்கு உடன்பட மறுத்து போலீஸாரிடம், அமா்நாத் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இ- பாஸ் இல்லாமல் பயணித்தது, போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து அமா்நாத் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவரை மருத்துவ பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.