நாகப்பட்டினம்
சென்னையிலிருந்து திரும்பியவருக்கு கரோனா தொற்று உறுதி
சென்னையிலிருந்து, சீர்காழி திரும்பியவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து, சீர்காழி திரும்பியவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், சீர்காழி ஒன்றியம், புங்கனூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் 27 வயதுடைய இளைஞர். சென்னையில் பணிபுரிந்த இவர் அண்மையில் நாகை திரும்பினார். இதையடுத்து அந்த இளைஞருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் மயிலாடுதுறை மருத்துவமனையில் தனிமை படுத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் வசித்த தெரு தனிமைப்படுத்தப்பட்டு, அனைத்து தெருக்களிலும் கிருமி நாசினி மற்றும், பிளீச்சிங் பவுடர் தெளித்து வருகிறது. அந்த பகுதி போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் ஜுனைதாபேகம்கமாலுதீன் வஜுருதீன் மேற்பார்வையில் சுகாதாரப் பணிகள் நடைபெறுகிறது.