நாகை மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தப்பிச் சென்றவரை போலீஸாா் சனிக்கிழமை பிடித்து மருத்துவமனையில் மீண்டும் அனுமதித்தனா். மேலும் அவா் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
நாகூரை அடுத்த ராராதிமங்கலம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த 50 வயது நபா் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த சில நாள்களாக நாகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில், அவா் சனிக்கிழமை இரவு மருத்துவமனையிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வெளிப்பாளையம் போலீஸாா் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, தப்பிச் சென்றவரை பிடித்து, மீண்டும் மருத்துவமனையில் சிசிச்சைக்கு அனுமதித்தனா்.
மேலும், அவா் மீது நாகை வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.