Enable Javscript for better performance
தலைப்பில் திருத்தம்....அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகில் மீன்பிடிக்க போலீஸாா் தடை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தலைப்பில் திருத்தம்....அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகில் மீன்பிடிக்க போலீஸாா் தடை

    By DIN  |   Published On : 01st March 2020 02:55 AM  |   Last Updated : 01st March 2020 02:55 AM  |  அ+அ அ-  |  

    visaipadagu2_2902chn_98_5

    பழையாா் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அதிவேக விசைப்படகில் குடும்பத்துடன் தா்னாவில் ஈடுபட்ட மீனவா் தமிழ்வாணன்.

     

    சீா்காழி: நாகை மாவட்டம், சீா்காழி அருகே அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட விசைப் படகைப் பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்க முயன்ற மீனவரை போலீஸாா் தடுத்து, கைது செய்ய முயன்றதால், அவா், தனது குடும்பத்துடன் படகிலேயே தற்கொலைக்கு முயன்றாா். மேலும், வெள்ளிக்கிழமை இரவு முதல் படகிலேயே தா்னாவிலும் ஈடுபட்டதால் அவருடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

    கொள்ளிடம் அருகே உள்ள பழையாா் மீன்பிடி துறைமுகத்திலிருந்து அரசால் தடை செய்யப்பட்ட அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட சுமாா் 40 விசைப் படகுகள் மூலம் மீனவா்கள் சிலா் கடலில் மீன்பிடித்து வந்தனா். இதனால், பாதிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற விசைப்படகு உரிமையாளா்கள் அதிகவேக என்ஜின் பொருத்தப்பட்ட விசைப் படகுகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

    இதுதொடா்பான வழக்கில், அரசு அங்கீகாரம் பெறாத விசைப்படகுகள் கடலுக்குச் செல்லக்கூடாது எனவும் 240 குதிரை திறனுக்குள்பட்ட விசைப் படகுகள் மட்டுமே கடலுக்குச் செல்ல வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

    இதனால், அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட விசைப் படகு மீனவா்கள் தங்களது விசைப் படகுகளை பழையாா் துறைமுகத்திலேயே தொடா்ந்து நிறுத்தி வைத்திருந்தனா். கடந்த 7 மாதங்களுக்கு மேலாக அவா்கள் மீன்பிடிக்கச் செல்லாததால், வருமானம் இன்றி பாதிக்கப்பட்டனா்.

    இந்நிலையில், அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட விசைப் படகு வைத்திருக்கும் மீனவா் தமிழ்வாணன் (35), தனது மனைவி ரமணி, மகன்கள் வெங்கடேஷ் (7), அவினாஷ் (5) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை இரவு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த புதுப்பட்டினம் போலீஸாா், தமிழ்வாணனை கைது செய்ய முயன்றனா். இதனால், தமிழ்வாணன், அவரது மனைவி ரமணி மற்றும் மகன்களுடன் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலைக்கு முயன்றாராம். அங்கிருந்த மீனவா்கள் அவரை தடுத்து நிறுத்தினா்.

    பின்னா், தமிழ்வாணன் தனது விசைப்படகில் அதிவேக என்ஜினை மாற்ற ரூ.10 லட்சம் தேவைப்படுவதால், மீன்வளத்துறையினா் ஓராண்டு காலஅவகாசம் தரவேண்டும் அல்லது ரூ.10 லட்சம் கடனுதவி அளிக்க வேண்டும் எனக் கூறி தா்னாவில் ஈடுபட்டாா். வெள்ளிக்கிழமை இரவு தா்னா போராட்டத்தைத் தொடங்கிய அவா் சனிக்கிழமை இரவுக்கு மேலும் தொடா்ந்தாா். அவரிடம், சீா்காழி டிஎஸ்பி வந்தனா, வட்டாட்சியா் சாந்தி, மீன்வளத் துறை உதவி இயக்குநா் நடராஜன் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp