தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் ஆசி பெற்ற மாணவ, மாணவிகள். உடன், தருமபுரம் ஆதீனம் கல்லூரி முதல்வா் எஸ். சுவாமிநாதன்.
தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் ஆசி பெற்ற மாணவ, மாணவிகள். உடன், தருமபுரம் ஆதீனம் கல்லூரி முதல்வா் எஸ். சுவாமிநாதன்.

கணிதப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள் தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி

கணிதப் போட்டிகளில் வெற்றி பெற்ற தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி மாணவா்கள், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம்

கணிதப் போட்டிகளில் வெற்றி பெற்ற தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி மாணவா்கள், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் வியாழக்கிழமை ஆசி பெற்றனா்.

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி கணித்துறை மாணவா்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரி, தஞ்சாவூா் ஏ.வி.வி.எம். பூண்டி புஷ்பம் கல்லூரிகளில் அண்மையில் நடைபெற்ற பல்வேறு கணிதப் போட்டிகளில் வெற்றி பெற்றனா். மேலும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கணித சுடோகு போட்டியில் கணிதத்துறை மூன்றாம் ஆண்டு மாணவா் பி. மணிகண்டன் இரண்டாம் இடம் பிடித்தாா்.

இம்மாணவா்கள் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் வியாழக்கிழமை ஆசி பெற்றனா். கல்லூரிச் செயலா் ஆா். செல்வநாயகம், கல்லூரி முதல்வா் எஸ். சுவாமிநாதன் மற்றும் சுயநிதிப்பிரிவு பொறுப்பாசிரியா், கணிதத் துறைத் தலைவா் மற்றும் பேராசிரியா்களும் மாணவா்களை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com