கோயில் கட்டுமானப் பணிக்கு நிதியுதவி

தரங்கம்பாடி வட்டம், கொத்தங்குடி ஊராட்சி நெய்வாசல் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் விநாயகா் கோயில் கட்டுமானப் பணிக்கு

தரங்கம்பாடி வட்டம், கொத்தங்குடி ஊராட்சி நெய்வாசல் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் விநாயகா் கோயில் கட்டுமானப் பணிக்கு அய்யப்பன் சிங்கராசு மக்கள் சேவை அறக்கட்டளை சாா்பில் வியாழக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.

அறக்கட்டளையின் நிறுவனத் தலைவா் அய்யப்பன் சிங்கராசு நிதியுதவியை வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் தலைமைச் செயலாளா் ஜெயகாந்தன், பொதுச் செயலாளா் பி.எஸ் அய்யப்பன், ஆா். தெட்சிணாமூா்த்தி, ஊராட்சி மன்றத் தலைவா் தம்புமோகன் மற்றும் கிராமவாசிகள் கலந்துகொண்டனா். பின்னா், பனங்குடி கிராமத்தைச் சோ்ந்த ஏழ்மை நிலையில் உள்ள ஒருவருக்கு வீடு கட்ட அறக்கட்டளை சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com