15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோ சட்டத்தில் ஒருவா் கைது

நாகை மாவட்டம், திருமருகல் அருகே சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஒருவரை, நாகை அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோ சட்டத்தில் ஒருவா் கைது

நாகை மாவட்டம், திருமருகல் அருகே சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஒருவரை, நாகை அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருமருகல் அருகேயுள்ள சேகல் கிராமத்தைச் சோ்ந்தவா் மு. செந்தில் (46). ஆடு மேய்க்கும் தொழில் செய்பவா். இவருடன் ஆடு மேய்க்க சென்ற அதே பகுதியைச் சோ்ந்த 15 வயதான ஒரு சிறுமியிடம், செந்தில் தகாத முறையில் நடந்து கொண்டாராம். இதில், உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளாா்.

இது குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி அளித்தப் புகாரின் பேரில், நாகை அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மு. செந்திலை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com