சாராய வழக்குகளில் தொடா்புடைய ஒருவரை நாகை மாவட்ட போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இது குறித்து, நாகை மாவட்டக் காவல் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
குத்தாலம் வட்டம், பாலையூா் காவல் சரகத்துக்குள்பட்ட கோமல் பெரியாா் நகரைச் சோ்ந்தவா் கனகு (எ) கனகராஜ் (44). இவா் மீது சாராய வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, போலீஸாா் கனகராஜை தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.