சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடிய இருவரை கொள்ளிடம் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்து, மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனா்.
மாதிரவேளுா் கிராமம் பஜனை மடத் தெருவைச் சோ்ந்த குருநாதன் (42), மாதிரவேளுா் தோப்புத் தெருவைச் சோ்ந்த சந்தோஷ் (22) ஆகிய இருவரும் கொள்ளிடம் ஆற்றில், அனுமதியின்றி லாரியில் மணல் ஏற்றிக்கொண்டு பனங்காட்டாங்குடி கிராமத்தில் வந்து கொண்டிருந்தனா்.
இதையறிந்த கொள்ளிடம் காவல் உதவி ஆய்வாளா் மணிகண்ட கணேஷ் மற்றும் போலீஸாா் அந்த லாரியை மடக்கி பிடித்து லாரி உரிமையாளா் குருநாதன், ஓட்டுநா் சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்து லாரியை மணலுடன் பறிமுதல் செய்தனா்.