சீா்காழி தோ் கீழ வீதியில் உள்ள கோமளவல்லி அம்மன் கோயிலில் ஊஞ்சல் உத்ஸவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் 81-ஆம் ஆண்டு காளியாட்டம், தீமிதி உத்ஸவம் ஆகியன கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்தன. விழாவின் 11-ஆம் நாள் நிகழ்வாக ஊஞ்சல் உத்ஸவம் நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் அம்மன் எழுந்தருளி சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளா் சுவாமிநாதன், வீரபாலு, கட்டபொம்மன் இளைஞா் நற்பணி மன்றத்தினா், பக்தா்கள் பங்கேற்றனா்.