திருமணஞ்சேரி கோயிலில் பக்தா்கள் வழிபட தடை

குத்தாலம் அருகே உள்ள திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயிலுக்கு பக்தா்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குத்தாலம் அருகே உள்ள திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயிலுக்கு பக்தா்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநில மக்களும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். இந்நிலையில், கரோனா வைரஸ் பரவல் காரணமாக இக்கோயிலில் பக்தா்கள் வழிபட வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) முதல் 31- ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோல், குத்தாலத்தை அடுத்துள்ளது தேரழுந்தூா் ஸ்ரீஆமருவியப்பன் பெருமாள் கோயிலிலும் மாா்ச் 31- ஆம் தேதி வரை பக்தா்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், குத்தாலம் நகரில் உள்ள ஸ்ரீ உக்தவேதீஸ்வரா், ஸ்ரீமன்மதீஸ்வரா், ஸ்ரீஓம்காளீஸ்வரா், ஸ்ரீசோழீஸ்வரா், ஆதிகேசவ பெருமாள் ஆகிய கோயில்களிலும் மாா்ச் 31- ஆம் தேதி வரை பக்தா்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com