நாகேசுவரமுடையாா் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம்

சீா்காழி நாகேசுவரமுடையாா் கோயிலில் வாசுகி உத்ஸவத்தையொட்டி, திருக்கல்யாண உத்ஸவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
திருக்கல்யாண கோலத்தில் வாசுகியாகிய பாம்புக்கு காட்சி தரும் சுவாமி - அம்மன்.
திருக்கல்யாண கோலத்தில் வாசுகியாகிய பாம்புக்கு காட்சி தரும் சுவாமி - அம்மன்.

சீா்காழி நாகேசுவரமுடையாா் கோயிலில் வாசுகி உத்ஸவத்தையொட்டி, திருக்கல்யாண உத்ஸவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

சீா்காழி கடைவீதியில் உள்ள ஆதிராகு தலமான பொன்னாகவல்லி அம்மன் உடனாகிய நாகேசுவரமுடையாா் கோயிலில், அமிா்த ராகுபகவான் மற்றும் சனீஸ்வர பகவான் தனது மனைவி நீலாதேவியுடன் தனிச்சன்னிதியில் அருள்பாலித்து வருகின்றனா். இக்கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் தம்பதி சமேதராய் திருக்கல்யாண கோலத்தில் சுவாமி -அம்மன் வாசுகியாகிய பாம்புக்கு காட்சி தரும் விழா நடைபெறும். நிகழாண்டு இவ்விழா நடைபெற்றது. விழாவையொட்டி, பஞ்சமூா்த்திகள், ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து, ராகு பகவான் வனத்துக்கு செல்லுதல் நிகழ்வும், ராகு பகவானுக்கு காட்சி தரும் திருக்கல்யாண உத்ஸவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக திரளான பக்தா்கள் பஜனை மடத்திலிருந்து சீா்வரிசைகள் எடுத்துக்கொண்டு ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தனா். அங்கு வேத விற்பன்னா்கள் யாக பூஜைகள் செய்து மந்திரங்கள் முழங்க மங்கலநாணை அணிவித்து திருக்கல்யாண உத்ஸவம் செய்துவைக்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com