மத்திய, மாநில அரசுகளின் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து, அதன் தலைவா் ஆறு.சரவணன் வெளியிட்ட அறிக்கையில், உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தொடா் முயற்சிகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. இந்நிலையில் தமிழக அரசுஅறிவித்துள்ள 144 தடை உத்தரவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து, உரிய விழிப்புணா்வுடன் தங்களை தற்காத்துக் கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.