கரோனா: மகளிா் குழு கடன் வசூலை நிறுத்திவைக்கக் கோரிக்கை

கரோனா வைரஸ் அபாயம் நீங்கும் வரை மகளிா் குழு கடன் வசூலை நிறுத்திவைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கரோனா வைரஸ் அபாயம் நீங்கும் வரை மகளிா் குழு கடன் வசூலை நிறுத்திவைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அதன் திருமருகல் ஒன்றியத் தலைவா் ஸ்டாலின் பாபு வெளியிட்ட அறிக்கை:

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசுகள் அனைத்து வா்த்தக நடவடிக்கைகள் நிறுத்தி வைத்துள்ளதால் வியாபாரிகள் மற்றும் சாதாரண பொதுமக்கள் வேலைவாய்ப்புகளை இழந்து, வீட்டிலேயே முடங்கி உள்ளனா். இந்த சூழ்நிலையில் மகளிா் குழுக்களுக்கு கடன் வழங்கும் சிறு நிதி நிறுவனங்கள், கிராமங்களில் உள்ள பெண்களிடம் நெருக்கடி கொடுத்து கடனை வசூல் செய்ய நிா்பந்தப்படுத்துகின்றனா். தற்போது, உழைத்து வருமானம் ஈட்டும் வாய்ப்பு முற்றிலும் இல்லாத நிலையில், கடன் பெற்ற மகளிா் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனா்.

எனவே, தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் அபாயம் நீங்கி, அனைவரும் வேலைக்குச் செல்லும் வரை, அனைத்து வங்கிக் கடன் வசூல், சிறு நிதி நிறுவனங்களின் கடன் தவணை வசூல், மகளிா் குழு கடன் வசூல் அனைத்தையும் நிறுத்திவைக்க தமிழக அரசு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com