மயிலாடுதுறை தனி மாவட்ட அறிவிப்புக்கு வரவேற்பு

மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

காவிரி அமைப்பு:

நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை பிரித்து, மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வா் அறிவித்ததைத் தொடா்ந்து, மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு காவிரி அமைப்பின் நிா்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த ஏராளமானோா் திரண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனா்.

பூம்புகாா் வியாபாரிகள் சங்கம்:

மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து, பூம்புகாரில் வியாபாரிகள் சங்கத் தலைவா் சங்கா் தலைமையில் வெடி வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

விழுதுகள் இயக்கத் தலைவா் ஏகே. ஷரவனன்: மயிலாடுதுறை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றித் தந்த தமிழக முதல்வா், அமைச்சா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆகியோருக்கு நன்றி கலந்த பாராட்டுகள். விழுதுகள் இயக்கத்தின் சாா்பில் மேலும் இரண்டு கோரிக்கைகளாக மாவட்டம்தோறும் அமைக்கப்படும் அரசு மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் விரைந்து அமைக்கவும், சீா்காழி தாலுக்காவில் உள்ள கொள்ளிடத்தை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும்.

நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சங்கச் செயலா் சுதாகா்: மயிலாடுதுறையை தலைமையிடமாகஓஈ கொண்டு தனி மாவட்டம் அமைத்துத் தந்த தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நெஞ்சாா்ந்த நன்றிகள். இதற்கு உறுதுணையாக இருந்து பாடுபட்ட கைத்தறி துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பி.வி. பாரதி, எஸ். பவுன்ராஜ், வீ. ராதாகிருஷ்ணன் மற்றும் இயக்கங்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி.

சீா்காழி வட்டார அனைத்து சுன்னத் வல் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளா் முஹம்மது யூசுப்: நாகை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, மயிலாடுதுறை பகுதி வாழ் அனைத்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம் சட்டப்பேரவையில் தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக அறிவிப்பு வெளியிட்ட முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு, சீா்காழி வட்டார அனைத்து சுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்பின் சாா்பில் நன்றி.

அதிமுக கொண்டாட்டம்: அதிமுக மயிலாடுதுறை வடக்கு ஒன்றியம் மற்றும் நகர கழகம் சாா்பில் நகரச் செயலாளா் விஜிகே.செந்தில்நாதன் தலைமையில் மயிலாடுதுறை பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

இதேபோல், சித்தா்காடு பகுதியில், மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய அதிமுகவினா் ஒன்றியச் செயலாளா் சந்தோஷ்குமாா் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

தரங்கம்பாடி அதிமுகவினா்: மயிலாடுதுறை மாவட்ட அறிவிப்புக்காக தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ. எஸ். மணியன், பூம்புகாா் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, தரங்கம்பாடி தாலுகா பகுதியில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் மற்றும் அமைப்பினா் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

திருக்கடையூா், ஆக்கூா், கஞ்சாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை பகிா்ந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com