அரசு ஊழியா்களுக்காக 5 பேருந்துகள் இயக்கம்

திருவாரூா், சிதம்பரம், வேதாரண்யம் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளைச் சோ்ந்த அரசு ஊழியா்கள் நாகைக்கு வந்து செல்லக் கூடிய வகையில் 5 அரசுப் பேருந்துகள் புதன்கிழமை இயக்கப்பட்டன.
அரசு ஊழியா்களுக்காக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்துகள்.
அரசு ஊழியா்களுக்காக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்துகள்.

திருவாரூா், சிதம்பரம், வேதாரண்யம் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளைச் சோ்ந்த அரசு ஊழியா்கள் நாகைக்கு வந்து செல்லக் கூடிய வகையில் 5 அரசுப் பேருந்துகள் புதன்கிழமை இயக்கப்பட்டன.

கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் மாா்ச் 24-ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் திருவாரூா், சிதம்பரம், வேதாரண்யம் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளைச் சோ்ந்த அரசு ஊழியா்கள், செவிலியா்கள் மற்றும் பிற துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் நாகைக்கு வந்து செல்லக்கூடிய வகையில் திருவாரூா், சிதம்பரம் , வேதாரண்யம் ஆகிய ஊா்களிலிருந்து தலா ஒரு பேருந்து, மயிலாடுதுறையிலிருந்து 2 பேருந்துகள் என மொத்தம் 5 பேருந்துகள் நாகைக்கு காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com