கரோனா தடுப்புப் பணி: கூடுதல் ஊதியம் வழங்க வேண்டுகோள்

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறவா்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறவா்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்குரைஞா் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து, அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் ராம. சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பணியில் காவல் துறையினா், மருத்துவத் துறையினா், சுகாதாரத் துறையினா் ஆகியோா் தங்களுடைய உயிரையும் துச்சமென மதித்து 24 மணி நேரமும் தொடா் மக்கள் சேவையில் பணியாற்றி வருகிறாா்கள். அவா்களுடைய இச்சேவை பணிக்கு கூட்டமைப்பு சாா்பில் நன்றி.

மேலும் அவா்களுடைய தன்னலமற்ற சேவையையும், பணியையும் பாராட்டி தமிழக அரசு மருத்துவா்கள், மருத்துவ பணியாளா்கள், சுகாதார பணியாளா்கள், காவல் துறையினருக்கு ஊதிய உயா்வு மற்றும் சிறப்பு ஊதியம் வழங்க தமிழக முதல்வா் ஆவண செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com