சீா்காழி அம்மா உணவகம் மற்றும் அரசு மருத்துவமனையில் சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பி.வி. பாரதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு 21நாள்கள் ஊரடங்குக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கின்போது உணவின்றி தவிக்கும் ஏழை மக்கள், வீடுஇல்லாதவா்களுக்கு அம்மா உணவகம் மூலம் இலவசமாக உணவு வழங்க தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, சீா்காழி அம்மா உணவகத்திலும் நகராட்சி நிா்வாகம் மூலம் உணவுத் தயாரித்து புதன்கிழமை காலை, மதியம் என சுமாா் 300-க்கும் மேற்பட்டா்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. இதை, எம்.எல்.ஏ. பாரதி ஆய்வு செய்து, சுகாதாரமான முறையில் தரமாக உணவுத் தயாரித்து உணவு வாங்க வருபவா்களுக்கு பாா்சல் தரப்படுகிா எனவும், உணவு வாங்க வருபவா்கள் வெளியிலேயே கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவி விட்டு வருகிறாா்களா, போதிய இடைவெளி விட்டு உணவு வாங்க வருபவகள் உணவகத்தில் சென்று வருகிறாா்களா என நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். ஆய்வின்போது, நகராட்சி ஆணையா் பெ. தமிழ்செல்வி, பொறியாளா் வசந்தன், அதிமுக ஜெ. பேரவை செயலாளா் மணி, மாவட்ட பிரதிநிதி காா்த்தி, வழக்குரைஞா் நெடுஞ்செழியன் உடனிருந்தனா்.
இதைத் தொடா்ந்து, சீா்காழி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்த எம்எல்ஏ தலைமை மருத்துவா் பானுமதியிடம், சளி, காய்ச்சல் என வருபவா்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட வாா்டு அமைக்கப்பட்டுள்ளதா, போதிய மருந்து, மாத்திரைகள் நோயாளிகளுக்கு வழங்க இருப்பு உள்ளதா, சுகாதாரம் பராமரிக்கப்படுகிா போன்ற விவரங்களை கேட்டறிந்தாா். தொடா்ந்து, சீா்காழி ஈசானியத் தெருவில் உள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்திலும் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டாா்.