திருவெண்காடு அரசினா் சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ. பாரதி.
திருவெண்காடு அரசினா் சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ. பாரதி.

சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

திருவெண்காடு அரசினா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை எம்.எல்.ஏ. பாரதி ஆய்வு மேற்கொண்டாா்.

திருவெண்காடு அரசினா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை எம்.எல்.ஏ. பாரதி ஆய்வு மேற்கொண்டாா்.

சுகாதாரத் துறை மூலம் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பி.வி. பாரதி புதன்கிழமை திருவெண்காடு அரசினா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீடீா் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பணியிலிருந்த மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். தவிர, சீா்காழி வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்மோகன் மற்றும் மருத்துவா்களிடம் வட்டார அளவில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, எம்.எல்.ஏ. கூறியது: திருவெண்காடு, காத்திருப்பு, வள்ளுவகுடி உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் அந்தந்த பகுதி ஊராட்சிகள் லம் உரிய உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது ஒன்றிய ஆணையா் ரெஜினாரானி, மருத்துவா் பிரபாகரன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராம்மோகன், சுகாதார ஆய்வாளா்கள் துரைகாா்த்திக், ரெங்கராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com