கீழ்வேளூா் பகுதியில் 144 தடை உத்தரவு ஆய்வு பணி புதன்கிழமை நடைபெற்றது.
கீழ்வேளூா் ஒன்றியத்துக்குள்பட்ட பட்டமங்கலம், தேவூா், கிள்ளுக்குடி, சாட்டியக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உதவித் திட்ட அலுவலா் கே. குமாா் தலைமையில் 144 தடை உத்தரவை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகிறாா்களா என்று ஆய்வு செய்தாா். அப்போது, பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கும் இடங்களில் இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினாா். மேலும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூா்களில் இருந்து இப்பகுதிக்கு வந்தவா்களிடம் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுரைகள் மற்றும் கரோனா தடுப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.